Sunday 12 February 2012

சிறப்புத் தொழுகை..!

ஏக இறைவனின் கருணையோடு..!  

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்..


ஸலாத்துல் ஹாஜா:.  
நமக்கு சிறிதோ பெரிதோ -தேவைகள் ஏற்பட்டு இருந்தால் இறைவனின் சந்நிதியில் நின்று இரண்டு ரக்அத் நஃ பில் -உபரித் தொழுகை - ஸலாத்துல் ஹாஜா தொழுது கொள்ள வேண்டும். அதனைத் தொடர்ந்து தரூத் ஸலவாத் ஓதவும். அடுத்து பின்வரும் துஆ -பிராத்தனையை ஓத  வேண்டும்.'அல்லாஹ் என்னுடைய துஆ -பிராத்தனையை நிராகரிக்க மாட்டான்' என உறுதியாக நம்ப வேண்டும்.

நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள் .'ஒருவருக்கு அல்லாஹ்விடமோ அல்லது வேறு மனிதரிடமோ ஒரு தேவை இருக்கும் பட்சத்தில் அவர் நன்கு ஒளு செய்து இரண்டு 'க்அத்'கள் தொழுது கொள்ளட்டும்.பிறகு,இறைவனைப் புகழ்ந்து நபி(ஸல்) அவர்கள் மீது ஸலவாத் ஓதட்டும்.இறைவனிடம் இவ்வாறு ஓதட்டும் .

லா இலாஹா இல்லல்லாஹுல் ஹலீமுல் கரீமு ஸுப்ஹானல்லாஹி ரப்பில் 'அர்ஷில்'அஸ்மி வல்ஹம்துலில்லாஹி ரப்பில் 'ஆலமீன அஸ்அலுக முஜிபாதி ரஹ்மதிக வஅஸர் ஆஇமி மக்ஃபிரதாக வல்'கனீ மத மின்குல்லி பிர்ரி வஸ்ஸலமாத மின்குல்லி இஸ்பன் லாத்த'லீ ஸுன்பன் இல்லா 'கஃபர்தஹு வலா ஹம்மன் இல்லா ஃபர்ரஜ்தஹு வலாஹாஜதன் ஹியலகரிஸன் இல்லா கஸீதஹ யாஅர்ஹமர் ராஹிமீன்.

பொருள் ;
அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் எவருமில்லை!அவன் மிகவும் சகிப்புத்தன்மையுடையவன்;மேலும், பெரும் அருளாளன்!பெரும் அர்ஷ்-க்கு அதிபதியாகிய அந்த அல்லாஹ் பரிசுத்தமானவன்.மேலானவன்!இன்னும் புகழனைத்தும் அகிலங்களின் அதிபதியாகிய அந்த அல்லாஹ்வுக்கே உரித்தாகியது!

(இறைவா) உனது கருணையே அவசியம் ஈட்டித் தரும்,மேலும்,உன் மன்னிப்பை கண்டிப்பாகப் பெற்றுத் தரும் விசயங்களை நான் உன்னிடம் யாசிக்கிறேன்.ஒவ்வோரு நன்மையிலும் பங்கை வேண்டுகிறேன்.மேலும்,ஒவ்வொரு பாவத்தை விட்டும்,பாதுகாப்பை உம்மிடம் தேடுகிறேன்.மேலும்,என்னுடைய எந்த துக்கத்தையும்,கவலையையும் அகற்றாமல் என்னை விட்டுவிடாதே!மேலும்,உன்னிடம் விருப்பமான என்னுடைய எந்தத் தேவைகளையும் பூர்த்தி செய்யாமல் என்னை விட்டு விடாதே!கருணை புரிபவர்கள் அனைவரையும் விட அதிகக் கருணை புரிபவன் நீயே!   

சகோதரி.
ஆயிஷா பேகம்.
      
       
      

4 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...