Wednesday 11 January 2012

தாய்பாலின் மகத்துவம் ..!


அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்..
இன்று நிறைய பெண்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதில்லை.ஒரு சில பெண்களைத் தவிர..
  •  மற்றப் பெண்களுக்கு வேலைக்கு போவது ஒரு காரணமாக இருக்கலாம் அவர்களின் எண்ணமும்..
  • பாலில் என்ன வந்தது டாக்டர் சொல்லும் புட்டிப் பாலை வாங்கி கொடுத்தால் போதும் என நினைக்கின்றனர்.. ஆனால் தாய்ப்பால் கொடுத்து வளர்க்கும் குழந்தைக்கும், புட்டிப் பால் கொடுத்து வளர்க்கும் குழந்தைக்கும் அறிவுத் திறனில் வித்தியாசம் இருப்பது ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது
தாய்ப்பால் கொடுத்து வளர்க்கும் பிள்ளைக்கு ஒவ்வாமை ,வலிப்பு போன்ற பிற நோய்கள் தாக்கும் வாய்ப்பு குறைவு..

தாய்ப்பாலில் தான் குழந்தைக்கு தேவையான அனைத்து சத்துக்களும் 
அபரிதமான நோய் எதிர்ப்பு சக்தியும் எளிதில் செரிமானமாகக் கூடியத் தன்மையும் இருக்கிறது நாம் புட்டிப் பாலை  என்ன தான் விலை கொடுத்து வாங்கினாலும் இதற்கு ஈடு வராது.'.இது 'அல்லாஹ்வின் அருட் கொடையாகும் '

மேலும் பாலூட்டும் தாய்க்கு கர்ப்பப்பை புற்று நோய் ,மார்பகப் புற்று நோய் வரும் வாய்ப்புக்கள் பெருமளவு குறைகின்றன .தாய்க்கும் குழந்தைக்கும் உன்னதமான உறவு ஏற்படுகிறது .

ஆறு மாதம் முதல் ஒரு வருடம் வரை கண்டிப்பாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.இது ஒவ்வொரு தாயின் கடமை.இந்த காலகட்டத்தில் வேலைக்கு போகாமல் இருப்பதே நல்லது..

ஆனால் எனக்கு பொருளாதாரப் பிரச்னை போய் தான் ஆக வேண்டும் என்றால் நீங்கள் வேலை பார்க்கும் இடத்தில அனுமதி பெற்று தகுந்த இடைவெளியில் தாய்ப்பால் கொடுக்க முயற்சி எடுங்கள் அது தான் இருவருக்கும் நல்லது..

நம் மார்க்கத்தில் திருமறையின் கூற்று 
தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு நிரப்பமான இரண்டு ஆண்டுகள் பாலூட்டுதல் வேண்டும் (குர்ஆன் 2: 233)
  
நம் பொறுப்பை நாம் தட்டிக் கழிக்க முடியாது அதற்கு தகுந்த பதிலை நாம் சொல்லியாக வேண்டும் ..

ஒரு உண்மை சம்பவம் ..

திண்டுக்கல் மாவட்டம் ,தவசிமேடை கிராமத்தை சேர்ந்தவர் நீதிமேரி இவருக்கு கொசவப்பட்டி அரசு மருத்துவமனையில் ஒரு பெண்குழந்தை பிறந்தது ..

தாய்ப்பால் பற்றாக்குறையால் பிறந்ததில் இருந்தே நோய்களின் தாக்கப் பட்டு சாவின் விளிம்புக்கு சென்று விட்டு ..அல்ஹம்துலில்லாஹ் கடைசிக் கட்டத்தில் ஆஷாவைக் காப்பாற்றி இருக்கிறது தாய்(களின்) பால்..

ஏழு மாத குழந்தை ஆஷாவுக்கு தாய்ப்பால் போதாதால் ,ஆறாவது நாளில் இருந்தே புட்டிப்பால் கொடுக்க ஆரம்பிச்சு இருக்காங்க .கொடுத்த நாப்பத்தி ரெண்டாவது நாளில் ஆரம்பிச்ச வயிற்றுபோக்கு ஆரம்பிச்சுருக்கு ..உடனே திண்டுக்கல் மாவட்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்து இருக்காங்க ..ரத்தம் ,குளுகோஸ் ஏற்றியும் ஒன்னும் சரியாகல .

குழந்தையின் நிலைமையைப் பார்த்த மருத்துவர் ஜெயின்லால் கூற்று ..

குழந்தைக்கு புட்டிப்பால் கொடுத்ததால் அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்பட நோய்க்கிருமியோடத் தாக்குதல் அதிகமாகி ரத்தத்தில் கலந்து 'செப்டிமீசியா
ஸ்டேஜு'க்கு வந்துடுச்சு குழந்தை.இறுதியா, 'மராஸ்மிக் ஸ்டேஜ்'ல உடம்புல உயிர் ஓட்டிட்டு இருந்தது என்று தான் சொல்லணும் ..

பொதுவா அரசு மருத்துவமனைகளில் மருந்துகளை வெளியில் இருந்து வாங்கிக் கொடுக்கக் கூடாது .இந்தக் குழந்தைக்காக வெளியில் இருந்து மருந்துகள் வாங்கிக் குடுத்தோம் ..ஆனாலும் ஒரு முன்னேற்றமும் இல்லை .

இறுதியா எங்க டீம் போட்ட மீட்டிங்கில் இரவல் 'தாய்ப் பால் 'கொடுத்துப் பார்க்கலாம் என முடிவு செய்தோம் வார்டில் இருந்த எல்லாத் தாய்மார்களிடம் குழந்தை ஆஷாவோட நிலைமையையும் தாய்ப்பாலோட மகத்துவத்தையும் எடுத்துச் சொல்லி புரிய வைத்தோம் ..

உடனே எல்லாத் தாய்மார்களும் சந்தோசமாக எடுத்து தர ஆரம்பிச்சாங்க இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை நாலஞ்சு நாளிலேயே குழந்தை தேறிடுச்சு 

பல தாய்மார்களின் மூலமா வைட்டமின் ,புரோட்டீன்னு எல்லாச் சத்தும் கிடைச்சதுல..இப்ப முழுசா குணமாகி ஆரோக்கியமா இருக்கு 'என்று சொன்ன மருத்துவர் ஜெயின்லால் நிறைவாகச் சொன்னது ...'இந்தக் குழந்தை பிழைச்ச விஷயத்தை 'மிராக்கிள் ஆஃப் பிரெஸ்ட் மில்க் 'னுதான் சொல்லனும்

'அல்ஹம்துலில்லாஹ்' 

இந்த நேரத்தில் குழந்தையைக் காப்பாற்ற உதவிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி பல .

சமீபத்தில், ஸ்வீடன் நாட்டின் லுண்ட் பல்கலை மற்றும் கோத்தென் பெர்க் பல்கலையின் ஆய்வாளர்கள் இணைந்து நடத்திய ஆய்வில், தாய்ப்பாலிலுள்ள ஹேம்லெட் என்ற பொருள், 40 வகையான புற்றுநோய் செல்களை அழிக்கும் திறன் பெற்றுள்ளது என, கண்டறிந்துள்ளனர்.

ஒவ்வொரு தாயும் தன குழந்தை நோய்நொடி இன்றி நல்ல ஆரோக்கியத்தோடும் ,நல்ல அறிவுக் கூர்மையோடும் இருப்பதைத் தான் விரும்புவாள்.அதற்கு தாய்ப்பால் பெருமளவில் உதவுகின்றது என்றால் அது மிகையில்லை ..

பொதுவாக நம் வீடுகளில் தாய்ப்பால் அதிகம் சுரக்க பூண்டு,வெந்தயக்களி.அதிகப் பசும் பால் கொடுப்பது வழமையாக உள்ளது.மதியம் சாப்பிட்டு முடித்ததும் ஒரு வெத்தலையில் கொஞ்சம் ஓமம் கொடுத்து சாப்பிடக் கொடுப்பார்கள் குழந்தைக்கு நல்லது என்று.அப்போது என்ன சொன்னாலும் கேட்போம் குழந்தைக்கு நல்லது என்பதால் ..

நம் அனைவருக்கும் இம்மைக்கும் மறுமைக்கும் நம்மைக் கண்ணியப்படுத்தும் பிள்ளைச் செல்வங்களை கொடுக்க அல்லாஹ்விடம் துஆ..ஆமின் .. 

சகோதரி
ஆயிஷா பேகம்.



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...