அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்..
பாலைவனத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு காலையில் போய் தூரத்தில் உள்ள ஒரு மலையை பார்த்துட்டு நின்னா கீழே விழும் அவனது நிழலுக்கு அடியில் ஒரு பெரிய பொக்கிஷம் இருக்குன்னு ஒருவன் கேள்விப்பட்டான்.உடனே அவன் காலையில் குறிப்பிட்ட இடத்தை போய் அடைந்தான் .மணல் மேல அவன் நிழல் நீண்டு மெல்லிசா விழுந்துச்சு.அவனும் பொக்கிஷத்துக்காக மணலை தோண்ட ஆரம்பிச்சான்.அவன் தோண்ட தோண்ட சூரியன் மேலே எழும்பிட்டே இருத்துச்சு.அவனது நிழலும் சுருங்கிட்டே இருத்துச்சு. அவனும் தோண்டிடே இருந்தான்.
நண்பகல்ல அவனோட நிழல் அவன் காலடிக்குள்ள வந்துச்சு.நிழலே இல்ல.அவனுக்கோ பெருத்த ஏமாற்றம்.இவ்வளவு கஷ்டப்பட்டும் நமக்கு பொக்கிஷம் கிடைக்கலையே அப்டின்னு அழுது புலம்பினான்.அப்ப அந்த வழி வந்த ஒரு பெரியவர் விவரம் கேட்டு விட்டு சொன்னார்.இப்போது தான் நிழல் சரியான இடத்தைக் காண்பிக்கிறது.பொக்கிஷம் உன் உள்ளே இருக்கிறது. அது தெரியாமல் நீ எங்கெங்கோ அலைகிறாய் என்று.உண்மை தானே, நம்மில் பல பேர் நம்மிடம் இருக்கும் திறமையை நம்பாமல் அடுத்தவர்களை பார்த்து பொறமை பட்டுக் கொண்டு வீணாக பொழுதைப் போக்கிக் கொண்டு இருக்கிறோம்.
உள்ளத்தில் நம்பிக்கை கொண்டால் செயலில் வெற்றி பெறலாம்.
சகோதரி.
ஆயிஷா பேகம்.
Tweet | ||||||
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ
ReplyDelete//பொக்கிஷம் உன் உள்ளே இருக்கிறது.//
இது தெரியாமல் தான் நிறைய பேரு வெளியே தேடிக்கிட்டு திரிகிறார்கள்
பகிர்வுக்கு நன்றி சகோதரி
வ அழைக்கும் சலாம் வரஹ்..
Deleteதங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.
அஸ்ஸலாமு அழைக்கும் .
ReplyDeleteநல்லதொரு ஆக்கம் .!
தொடரட்டும் I.A.S ஆகிய உங்களின் எழுத்து பணி.
...akjk
வ அழைக்கும் சலாம் வரஹ்..
Deleteநீங்க I.A.S. யை விடுற மாதிரி இல்லையா..?
தங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.
நண்பா. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.
ReplyDeleteநன்றி
யாழ் மஞ்சு
present
ReplyDelete